சீனாவில் மீண்டும் கொரோனா: பெய்ஜிங்கில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! | Beijing in unexpected emergency manner immediately after 5 new coronavirus instances found in Chinese money | Puthiyathalaimurai – Tamil News | Newest Tamil News | Tamil News On-line

Data:

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருவதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து பகுதிகளில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து உலக நாடுகள் ஏற்கெனவே அச்சத்தில் மூழ்கியுள்ளன. கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாக இந்த வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.&#13

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாகச் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரங்களில் இதுவரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீன தேசிய சுகாதார ஆணையம் இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த முறை கொரோனா பாதிப்புகள் அனைத்தும் ஷுனி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், வைரஸால் இதுவரை எந்த புதிய இறப்புகள் பதிவாகவில்லை என்பது சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தி.&#13

image

தற்போது சீனாவில் விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீன அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. போர்க்கால முறையில் 800,000 மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெய்ஜிங்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் “அவசரகால” பயன்முறையில் நுழையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. குடியிருப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் காணப்படும் கிராமங்களை மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஷுனியில் இரண்டு கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சாயாங் மாவட்டத்தின், சுற்றுப்புறங்களில் 2,34,413 பேரை பரிசோதித்து முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். யாருக்கும் நேர்மறை முடிவுகள் வரவில்லை. அதேநேரத்தில், சோதனை முடிவுகள் பெறாத நபர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சீனா பெரும்பாலும் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான நகரங்களில் அவ்வப்போது வழக்குகள் மீண்டும் வருகின்றன. பிப்ரவரி 11 முதல் ஒரு வார கால சந்திர புத்தாண்டு விடுமுறைக்கு முன்னர் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று மாநில ஊடக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.&#13

பெய்ஜிங் தனது அரசு ஊழியர்களை ஜனவரி 1 முதல் விடுமுறை வரை நகரத்தில் தங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் இந்த காலகட்டத்தில் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.&#13

READ  La nomina di Mnangagwa solleva polemiche - Bulawayo 24 News

தீம் பூங்காக்கள் மற்றும் தேவாலயங்கள் போன்ற பொது இடங்கள் இயக்க நேரத்தை குறைத்துள்ளன. பெய்ஜிங்கில் உள்ள சில கத்தோலிக்க தேவாலயங்கள், வாங்ஃபுஜிங்கின் கத்தோலிக்க திருச்சபை உட்பட தேவாலய ஊழியர்களை அனுமதிப்பதை நிறுத்திவிட்டு குழு நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக பெய்ஜிங் பேராயர் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். ஜனவரி 1 முதல் விடுமுறை வரை வணிக நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

articoli Correlati

Come Applicare le Unghie Acriliche a Casa: Guida Passo Passo con la Polvere per Unghie

Le unghie acriliche sono una delle soluzioni più popolari per ottenere mani eleganti e ben curate senza dover...

I giocatori di The Sims sono attratti dalla demo altamente realistica di Character Creator di Inzoi

Inzoi, un concorrente di The Sims dello sviluppatore Krafton di PUBG, sta attirando molti nuovi fan con la...

La sonda spaziale JUICE ha completato con successo il suo volo sopra la Luna e la Terra – rts.ch

Lunedì e martedì la sonda spaziale europea JUICE, responsabile dell'esplorazione delle lune di Giove, ha realizzato una prima...